02.10.2021 அன்று நடைபெற உள்ள கிராமசபை கூட்டங்களில் அனைத்து நிலை கல்வி அலுவலர்கள் கலந்து கொள்ள மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!!! - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Friday, October 1, 2021

02.10.2021 அன்று நடைபெற உள்ள கிராமசபை கூட்டங்களில் அனைத்து நிலை கல்வி அலுவலர்கள் கலந்து கொள்ள மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!!!

02.10.2021 அன்று நடைபெற உள்ள கிராமசபை கூட்டங்களில் அனைத்து நிலை கல்வி அலுவலர்கள் கலந்து கொள்ள மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!



கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி இழப்பு குறைப்பதற்கு தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் " மக்கள் பள்ளி என்கிற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதன் தொடச்சியாக ,  பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் கடிதத்தின் படி , எதிர்வருகின்ற அக்டோபர் 2 , 2021 அன்று நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில் பள்ளிக் கல்வி சார்ந்து விவாதிக்கப்பட உள்ள கூட்டப்பொருளோடு , இந்த மக்கள் பள்ளித் திட்டமானது அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி நலனுக்காக செயல்படுத்தப்பட உள்ளது என்பது சார்ந்த கூட்டப்பொருளையும் தவறாது சேர்த்து , கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு , அக்டோபர் 2 , 2021 அன்று நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில் அனைத்து நிலை கல்வி அலுவலர்களும் ( CEO , DEO , DIET- Principal and Facuities , BEO , ADPC , APO , HMs , EDCS , DCs and BRTES ) கிராம சபை கூட்டங்களில் கண்டிப்பாக கலந்து கொண்டு இத்திட்டம் சிறப்பாக செயல்படுவதற்கான ஆலோசனைகளை வழங்கி அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களும் இத்திட்டத்தின் வாயிலாகப் பயனடைவதை உறுதி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

எனவே , இந்நிகழ்வினை சிறப்பு கவனத்துடன் கண்காணித்திட உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group

No comments:

Post a Comment